ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில் புதிய கட்சி தொடங்கினார் மனைவி பொற்கொடி!

8 hours ago 4

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது மனைவி பொற்கொடி, புதிய கட்சியைத் தொடங்கினார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், அவர் வகித்த தலைவர் பதவியில் ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். பின்னர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும், தன்னுடைய குடும்பத்தைக் கவனித்து கொள்வதிலும் பொற்கொடி முழுமையாக கவனம் செலுத்துவார் என்று கூறி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பொற்கொடியை கட்சி தலைமை விடுவித்தது.

Read Entire Article