டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்குமாறு இந்தியா கூட்டணி எம்பி-க்கள் அனைவரும் கையெழுத்திட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற கட்சிகளும் சிறப்பு கூட்டத் கூட்ட கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழு அளித்த விளக்கம் வரை தெரிவிக்குமாறு வலியுறுத்தினர். பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகள். உலகின் முன்பு தனது கருத்துக்களை ஒன்றிய அரசு கூறும்போது, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பதும் அவசியம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
The post ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்ட இந்தியா கூட்டணி எம்பி-க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்..!! appeared first on Dinakaran.