ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் புகார் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ராமதாஸ்

4 months ago 24

விழுப்புரம்: பழங்குடி ஊராட்சி தலைவரை சாதியை சொல்லி வன்கொடுமை செய்தவர்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

செஞ்சி அருகே ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவராக சங்கீதா உள்ளார். இவர் கடந்த 2ம் தேதி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் எதிரே அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் விசாரித்தனர்.அப்போது, பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த தன்னை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் உட்பட 4 பேர் உட்பட 4 பேர் சாதியை சொல்லி வன்கொடுமை செய்வதாக கூறி செப்டம்பர் 1 ம் தேதி செஞ்சி போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

Read Entire Article