ஆனந்தூர் ஊராட்சியில் புதிய நூலகம் கட்டப்படும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில்

6 months ago 14

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூரில் சேதம் அடைந்த நூலக கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டப்படும் என ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் தெரிவித்துள்ளது. ஆனந்தூரில் இடிந்த கட்டடத்தில் உள்ள நூலகத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்ட உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. சேதம் அடைந்த கட்டடத்தில் உள்ள நூலகம், தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. வழக்கு தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ராமநாதபுரம் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. மேலும் , தொண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொடர்ந்த வழக்கை நவம்பர் .25-க்கு ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

The post ஆனந்தூர் ஊராட்சியில் புதிய நூலகம் கட்டப்படும்: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article