சென்னை: சாதியின் பெயரால் தொடர்ச்சியாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது அநாகரிகத்தின் உச்சம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வித்யா (22) ஆணவக் கொலை கொடூரமாக நடந்துள்ளது. வித்யா, வெண்மணி என்ற இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் வயது வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெண்மணியின் பெற்றோர்கள் வித்யா வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து முறையாக பெண் கேட்ட நிலையில் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.