சென்னை: தமிழகத்தை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், அது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், “சமூக நீதி, மக்கள் உரிமைகளுக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து பாதுகாக்கும் இயக்கம்பாமக. தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும்.