ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணம் மதிமுகவுக்கு இல்லை: துரை வைகோ எம்பி பேட்டி

2 months ago 13


திருச்சி: ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணம் மதிமுகவுக்கு கிடையாது என்று எம்பி துரை வைகோ கூறினார். சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று காலை எம்பி துரை.வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: திருமாவளவன் தொடர்ந்து கூட்டணியில் தான் உள்ளேன் என்று கூறி வருகிறார். திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே போய் விடுவார் என்று கூற முடியாது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணம் மதிமுகவுக்கு கிடையாது என்றார்.

The post ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற எண்ணம் மதிமுகவுக்கு இல்லை: துரை வைகோ எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article