ஆடுகள் விற்பனை மந்தம்

7 months ago 26

காரிமங்கலம், நவ.20: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 450 மாடுகள், 350 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ₹25 லட்சத்திற்கு மாடுகளும், ₹20 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி 3 லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து மற்றும் விற்பனை குறைந்து காணப்பட்டது. சபரி மலை சீசன் தொடங்கியதால் கால்நடை விற்பனை மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ஆடுகள் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Read Entire Article