ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். அதிமுக மீது திமுக கரிசனம் காட்ட வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: சட்டப்பேரவையில் பட்ஜெட் பதில் உரையில் நிதி அமைச்சரின் வார்த்தை ஜாலம் இருந்ததே தவிர, செயல்பாடுகள் எதுவும் இல்லை. தமிழகத்தில் வரும் 2025-26-ம் ஆண்டில் பெட்ரோல், மது விற்பனை மூலமாக ரூ.1.63 லட்சம் கோடி வருவாய் தமிழக அரசுக்கு கிடைக்கும். இது கடந்த 2020-21-ல் கிடைத்ததைவிட ரூ.81,431 கோடி அதிகம். அதேபோல, ஜிஎஸ்டி, பத்திர பதிவு, கலால் வரி, வாகன வரி என மாநில அரசு வரி வருவாய் மூலம் 2020-21-ம் ஆண்டைவிட 2025-26-ல் கூடுதலாக ரூ.1.01 லட்சம் கோடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மத்திய அரசின் வரி பகிர்வு ரூ.33 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைக்கும்.