ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் மின்னலாய் ஆடிய துளசிமதி 18 நிமிடங்களில் வெற்றி; அரையிறுதியில் தமிழக வீராங்கனை

4 hours ago 3

மியூயாங்: தாய்லாந்தின் மியூயாங் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டி நடக்கிறது. 4வது நாளான நேற்று 3வது சுற்று, மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியா சார்பில் களம் கண்டுள்ள தமிழ்நாட்டின் துளசிமதி முருகேசன், தாய்லாந்து வீராங்கனை வாதினி நரமித்ேகார்ன்பூரி ஆகியோர் மோதினர். அதில் அதிரடியாக விளையாடிய துளசிமதி வெறும் 18 நிமிடங்களில் 21-8, 21-6 என நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

அடுத்து காலிறுதி ஆட்டத்தில் துளசிமதி நேற்று ஜப்பான் வீராங்கனை அகிகோ சுகினோ உடன் மோதினார். அதையும் 26நிமிடங்களிலேயே 21-6, 21-15 என நேர் செட்களில் வென்ற துளசிமதி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். மற்றொரு மகளிர் காலிறுதியில் தமிழ்நாட்டின் மனிஷா ராமதாஸ் 21-5, 21-3 என நேர் செட்களில் ஹாங்காங் வீராங்கனை மிங் வோங்கை வென்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் 18 நிமிடங்களில் மின்னல் வேகத்தில் முடிந்தது.மகளிர் இரட்டையர் பிரிவிலும் துளசிமதி/மானசி ஜோஷி இணை அரையிறுதியில் விளையாட உள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாட்டின் நவீன் சிவகுமார் 19-21, 21-16, 21-12 என்ற செட்களில் சக வீரர் யோகேஷை வென்று அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

 

The post ஆசிய பாரா சாம்பியன்ஷிப் பேட்மின்டன் மின்னலாய் ஆடிய துளசிமதி 18 நிமிடங்களில் வெற்றி; அரையிறுதியில் தமிழக வீராங்கனை appeared first on Dinakaran.

Read Entire Article