ஆங்கிலத்தில் தமிழ்நாடு பெயரில் ‘ழ’கரம் வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்ய கோரி வழக்கு

3 months ago 19

மதுரை: ஆங்கில வார்த்தையில் தமிழ்நாடு என்ற பெயரில் சிறப்பு ‘ழ’கரம் வரும் வகையில் அரசாணையில் மாற்றம் செய்யக்கோரிய மனுவை விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக சிறப்பு ‘ழ’ கரம் உள்ளது. ஆனால், அரசாணைகளில் ‘STATE GOVERNMENT OF TAMILNADU’ எனக் குறிப்பிடப்படுகிறது. இது ‘தமிழ்நாடு’ என்பதை ‘டமில்நடு’ என தவறாக உச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே சிறப்பு ‘ழ’கரம் இடம் பெறும் வகையில் அரசாணைகளில் ‘THAMIZHL NAADU’ அல்லது ‘TAHMIZHL NAADU’ எனது திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021ல் வழக்கு தொடர்ந்தேன்.

Read Entire Article