“அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்” - அமைச்சர் தங்கம் தென்னரசு

4 hours ago 3

சென்னை: “அவ்வையார் என்பது பெண் இனத்தைக் குறிக்கும் மதிப்பு மிக்க சொல்” என்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய (மார்ச் 18) கேள்வி நேரத்தின்போது, வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., ஓ.எஸ் மணியன் பேசுகையில், “வேதாரண்யம் தொகுதி, துளசியாபட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் தொடங்க அரசு முன்வருமா” என்று கேட்டார். அதற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், “வாழ்வியல் தத்துவத்தை ஒரு வரியில் வழங்கிய அவ்வையார் பெயரில் அறிவுக்களஞ்சியம் அமைப்பது குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிதி நிலைக்கேற்ப பரிசீலிக்கப்படும்” என்றார்.

Read Entire Article