திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே முத்தூர் பெரியதோட்டத்தைச் சேர்ந்த வயதான விவசாய தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள துலுக்கமுத்தூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது மனைவி பர்வதத்துடன் தோட்டத்து வீட்டிலேயே தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.
இவர்களது மகன், மகள் என இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வரும் சூழலில் முதிய தம்பதியினர் கடந்த ஓராண்டுக்கு மேலாக வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை இவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை என அறிந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது இருவரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவிநாசி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவிநாசி போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தற்போது தீவிரமாக தடயங்களை சேகரிக்கும் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்டமாக விசாரணையில் நகை காணாமல்போய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலையானது நகை அல்லது பணம் கொள்ளையடிக்கும் நோக்கில் செய்யப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக செய்யப்பட்டதா எனவும் தொடர்ந்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post அவிநாசி அருகே முத்தூர்பெரியதோட்டத்தைச் சேர்ந்த வயதான தம்பதி வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.