திருச்சி: அவதூறு வழக்கு விசாரணைக்காக சீமான் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை? என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை ஆஜராவதாக கடந்த முறை கூறிய நிலையில் இன்று ஆஜராகாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். சீமான் மீதான வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
The post அவதூறு வழக்கு விசாரணைக்காக சீமான் ஏன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை?: நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.