அவசரகால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு..!!

6 months ago 22

சென்னை: பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து தமிழ்நாடு நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நீர்வளத்துறையின் 147 பொறியாளர்களைக் கொண்டு வெள்ள மீட்புக்குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. வெள்ள மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள். வெள்ள மீட்புக் குழுவினர், பேரிடர் ஏற்பட்ட இடத்துக்கு நேரடியாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள். வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் விரைவில் இயல்புநிலை திரும்ப தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அவசரகால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article