அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

3 months ago 13

கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. திட்டத்தை துவக்கி நிதி ஒதுக்கியதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். ஆனால் அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பாராட்டு விழா மாநாட்ட்டில் பங்கேற்கவில்லை.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் கூறியதாவது;
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திய ஏற்பாட்டுக் குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது ஒரு வேண்டுகோள் வைத்தேன். எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் அந்த விழாவில் இடம் பெறவில்லை என்று கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.

இத்திட்டத்தைக் கொண்டு வருவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ரூ3.72 கோடி நிதி வழங்கினார். திட்டம் குறித்து ஆய்வு செய்ய அப்போது பொது பணித்துறை அமைச்சராக இருந்த ராமலிங்கம் உத்தரவிட்டார். இந்த பணிகள் தொடங்குவதற்காக அடித்தளமாக இருந்த அவர்களின் படங்கள் இல்லாததால், அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. தங்களுடன் கலந்து செய்திருந்தால், அதை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கூட்டுக்குழு கவனத்திற்கு கொண்டு சென்றிருப்போம். வளர்த்து ஆளாக்கிய தலைவர்களுடைய உருவப்படங்கள் இல்லாததால், நிகழ்ச்சிக்கு செல்லவில்லை என கூறினார்.

The post அழைப்பிதழ், பேனர்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவுக்கு செல்லவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் appeared first on Dinakaran.

Read Entire Article