சென்னை: அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை தொடர்பாக அறிக்கை சமர்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக் குழு 4 அறிக்கைகளை சமர்பித்தது. தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம் குறித்த அறிக்கை வழங்கப்பட்டது என அவர் கூறினார்.
The post அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி – தமிழ்நாட்டை வடிவமைக்கும் பாதை தொடர்பாக அறிக்கை சமர்பிப்பு: ஜெயரஞ்சன் பேட்டி appeared first on Dinakaran.