அறநிலையத் துறையை அரசிடமிருந்து பறிக்கும் முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

5 days ago 3

சென்னை: “இந்து சமய அறநிலைத்துறை ஏறத்தாழ 100 ஆண்டுகளைக் கடந்து இமாலய சாதனைகளை புரிந்து, திருக்கோயில்களுடைய வருமானம் கடவுளின் பெயரால் முறைகேடுகள் நடப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையை அரசிடமிருந்து பறித்து தனியாரிடம் கொடுக்க வேண்டுமென்று சொல்வதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு எதிர்பார்த்தபடியே அரசியல் ஆதாயத்தை அடையும் நோக்கில் நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி யாரும் அரசியல் பேச மாட்டோம் என்று சொன்னதை மீறுகின்ற வகையில், அதில் உரையாற்றிய ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள், முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பகிரங்கமாக தமிழக பாஜகவுக்கு ஆதரவாக அந்த மாநாட்டை தேர்தல் பிரச்சார கூட்டமாக மாற்றி விட்டார்கள்.

Read Entire Article