அர்ஜூன் சம்பத் மகன் கோவை சிறையில் அடைப்பு

2 months ago 11

கோவை: கோவையில் அக்டோபர் 27ம் தேதி ஈஷா யோகா மையத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக அர்ஜூன் சம்பத் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞர்அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜி மனு தாக்கல் செய்தார். ஆனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கோராததால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு 7.10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வரும் 28ம் தேதி வரை அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் அருண்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டார். இதையடுத்து, ஓம்கார் பாலாஜி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அர்ஜூன் சம்பத் மகன் கோவை சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article