அர்ஜுன் சம்பத் மகன், கஸ்தூரி கைது: இந்து முன்னணி மாநில தலைவர் கண்டனம்

3 months ago 14

கோவை: “திமுக அரசு இந்துகளுக்கு விரோதமாக உள்ளது,” என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். மேலும், அர்ஜுன் சம்பத் மகன் மற்றும் நடிகை கஸ்தூரி கைதுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் சார்பில், மருதமலை முருகன் கோயிலில், வேல் வழிபாடு நிகழ்ச்சி இன்று (நவ.18) நடந்தது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த ஆண்டு இந்த வேல் வழிபாடு, அன்னையர் முன்னணி சார்பில் சென்னிமலையில் துவங்கி பழனியில் நிறைவடைந்தது. நடப்பாண்டு திருப்பூர் அருகேயுள்ள கொங்கணகிரியில் ஆரம்பித்து திருப்பூர் அழகு மலையில் நிறைவுபெறுவது போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற 7 முருகன் மலை கோயில்களில் வேல் வழிபாடு நடத்திக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டு, மருதமலையில் வேல் வழிபாடு நடைபெற்றது.

Read Entire Article