அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

2 months ago 8

அரியலூர், நவ. 15: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜி மீது கொலை வெறி தாக்குதலைக் கண்டித்து, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள், புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களுக்கான பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.இதில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவச் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article