அரசு விடுதி மாணவர்கள் நிதியில் மோசடி: சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

2 hours ago 2

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு வாங்க வழங்கப்பட்ட நிதியில் மோசடி நடைபெற்ற வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஆதிதிராவிட நலத்துறையின் விடுதிகளில் தங்கிப் பயிலும் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.100, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அந்த மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கப்படுகிறது. இந்த வகையில் சிவகங்கை மாவட்டத்துக்கு 2017 ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை அரசால் வழங்கப்பட்ட உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

Read Entire Article