வடலூர், ஜன. 23: கும்பகோணம் அருகே தேவனாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சாந்தன்(39), அரசு பேருந்து ஓட்டுனர். சம்பவத்தன்று கும்பகோணத்தில் இருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார். வடலூர் அருகே வந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற மொபட் மீது மோதியதில், அதை ஓட்டிச் சென்ற பெண் கீழே விழுந்தார். பின்னர் பேருந்தை நிறுத்தி கீழே விழுந்து பெண்ணை மீட்டு சாந்தன் தண்ணீர் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருங்குழி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், செல்வரகன் ஆகிய 2 பேரும் சாந்தனை அசிங்கமான திட்டி அடித்து காயப்படுத்தினர். இது குறித்து சாந்தன் கொடுத்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிந்து அன்பழகன், செல்வரகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
The post அரசு பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.