தேவதானப்பட்டி, மே 7: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சத்தியமங்கலம் டிப்போவில் இருந்து நேற்று முன்தினம் சத்தியமங்கலம் டூ தேனி வந்தது. தேனியில் இருந்து அந்த பஸ் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 7மணியளவில் சத்தியமங்கலம் புறப்பட்டது. அப்போது தேனியில் இருந்து ஏறிய தம்பதி திருப்பூருக்கு டிக்கெட் எடுத்துள்ளனர். பின்னர் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே வந்துள்ளனர். இதை பார்த்த நடத்துனர் வெங்கடாச்சலம்(32) மற்றும் சக பயணிகள் அந்த தம்பதயை சத்தம் போட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த அப்பெண்ணின் கணவர் நடத்துனரையும் சக பயணிகளையும் ஒருமையில் பேசி சத்தம் போட்டுள்ளார்.
அப்போது நடத்துனர் பஸ்சை தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றுள்ளார். தேவதானப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வந்தவுடன் அந்த நபர் கீழே இறங்கி கீழே கிடந்த கல்லை எடுத்து அரசு பஸ்சின் பின்புற கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இது குறித்து அரசு பஸ் நடத்துனர் வெங்கடாச்சலம் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அரசு பஸ் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.