அரசு பள்ளியில் விழிப்புணர்வு

2 months ago 8

கீழக்கரை, நவ.15: திருப்புல்லாணி ஒன்றியம் தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு சார்பு ஆய்வாளர் கண்ணன் பேசினார். மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களை ஒரு போதும் பயன்படுத்த மாட்டோம் என நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் குமாா் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கண்காணிக்க மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் ஆலோசனை வழங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொன் மொழிகளுடன் கலாம் உருவம் பொறித்த சீருடை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆசிரியர் முருகவேல் நன்றி கூறினார்.

The post அரசு பள்ளியில் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article