அரசு நிதி கையாடல் அதிகாரிகள் மீது வழக்கு

7 hours ago 2

சிவகங்கை ஏப்.26: தேர்தல் பணிகளுக்கு ஒதுக்கிய அரசு நிதியை கையாடல் செய்ததாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பழனியம்மாள் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலராக சுப்பிரமணியன், உதவி பொறியாளராக திருமாறன் என்பவரும் பணியாற்றினர்.

இவர்கள் கடந்த 2021ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிதியை, வாக்குச் சாவடிகளுக்கு தடுப்புகள் அமைத்தல், விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்ததாக போலி ரசீது மூலம் ரூ.6,99,715 கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு நிதி கையாடல் அதிகாரிகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article