அரசு ஊழியர்கள் - திமுக உறவை பிளவுபடுத்தும் இபிஎஸ் கனவு பலிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு

4 months ago 14

சென்னை: அரசு ஊழியர்களுக்கும் திமுகவுக்கும் இடையிலான வலிமையான உறவில் பிளவு ஏற்படுத்தலாம் என்ற பழனிசாமியின் பகல் கனவு பலிக்காது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: “அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். அவர்களை அதிமுக என்றுமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே திமுக நடத்தும். ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர்.

Read Entire Article