அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்: டாஸ்மாக் விற்பனையாளர்கள் வலியுறுத்தல்

8 months ago 42

வண்டலூர்: தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டம் வண்டலூரில் இன்று (அக்.3) நடைபெற்றது. இதில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் டாஸ்மாக்கில் 21 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்தி, அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு இஎஸ்ஐ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் பணியை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Read Entire Article