அரசியல் அடையாளத்தை இழக்கிறார்களா வீரபாண்டியார் வாரிசுகள்..?

3 months ago 23

கருணாநிதியே மறுத்துச் சொல்லத் தயங்கும் அளவுக்கு திமுகவின் பவர்ஃபுல் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம். பொதுக்குழுவில் வீரபாண்டியார் பேச எழுந்தால் அதுதான் மாலைப் பத்திரிகைகளில் தலைப்பாகும். 1993-ல் வைகோ பிரச்சினை எழுந்த போது அவருக்காக மதுரை விராட்டிபத்து பொதுக்குழுவில் தரையில் அமர்ந்து நியாயம் கேட்டவர் வீரபாண்டியார்.

இத்தனை இருந்தாலும் சேலத்தை திமுக கோட்டையாக வைத்திருந்ததால் அவரை கருணாநிதியாலேயே எதுவும் செய்யமுடியவில்லை. சேலம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நேரடியாக தலையிட சக திமுக அமைச்சர்களே தயங்கிய காலங்களும் உண்டு.

Read Entire Article