அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

2 months ago 8

சென்னை: அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் சமத்துவ நாள் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து படத்துக்கு மலர்தூவி வணங்கினார். அங்கு அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள் வரவேற்றனர்.

இதை தொடர்ந்து அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார். உறுதி மொழியை அவர் வாசிக்க அங்கிருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர். அந்த வாசகம் வருமாறு: “சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து,

எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்பு சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்”. இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

The post அம்பேத்கரின் 135வது பிறந்த நாள் முதல்வர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி appeared first on Dinakaran.

Read Entire Article