“அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து முன்னணி வலியுறுத்தல்

3 months ago 11

சென்னை: “இந்துக்கள் நலனில் அக்கறை இல்லாத, இந்து கோயில்களின் நலனில் அக்கறை காட்டாமல், பொறுப்பற்ற முறையில் பேசி வரும் அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்,” என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையைக் காக்க நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் மக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கட்சி பாரபட்சம் இன்றி கலந்து கொண்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவின் கைக்கூலி அமைச்சர் சேகர்பாபு போராட்டத்தில் கலந்து கொண்ட இந்துக்களையும் முருக பக்தர்களையும், இந்து முன்னணியினரையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார்.

Read Entire Article