அமித்ஷா தமிழகம் வருகை கூட்டணி கட்சிகளுக்கு பலம் சேர்க்கும்- ஜி.கே.வாசன்

4 hours ago 1

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க திருப்பூர் வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா தமிழகத்தில் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. அகில இந்திய தலைவர்கள், தமிழகத்துக்கு வந்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகத்துக்கு வருவது கட்சியினருக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுக்கும். அ.தி.மு.க., பா.ஜனதா, த.மா.க. மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணி கட்சிகளுக்கும் பலம் சேர்க்கும். வலுவான கூட்டணியாக அமையும். மக்களின் ஆதரவை பெற்றுள்ளோம். ஆட்சி மாற்றமே எங்களுடைய நோக்கம். இந்த நோக்கத்துக்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைந்து பணியாற்றி ஆட்சி மாற்றத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் வேதனையான சாதனையைத்தான் பார்க்க முடிகிறது. மக்களுக்கான வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் கொடுமை, போதை கலாசாரத்தை கட்டுப்படுத்த காவல்துறையாலும் முடியவில்லை. அரசின் செயல்பாடும் இல்லை. இன்னும் 10 மாதங்களில் எப்படி சரி செய்ய முடியும் என்ற அவநம்பிக்கைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் அதிகரித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article