அன்புமணிக்கு பின்னால் அணிவகுப்பவர்கள் கட்சி விரோதிகளா? - ராமதாஸை கேள்வி கேட்கும் பாமக நிர்வாகிகள்!

1 week ago 3

“நான் உயிரோடு இருக்கும் வரை பாமக-வுக்கு தலைவர் நான் தான்” என்று திடமாகச் சொல்கிறார் மருத்துவர் ராமதாஸ். பதிலுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அய்யா அவர்களுக்கு சுகர், பிபீ எல்லாம் இருக்கிறது. அவர் நீண்ட ஆயுளோடும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும். என் மீது ஏதாவது தவறு இருந்தால் அய்யா அவர்களே... என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று டச்சிங்காக பேசி, ராமதாஸ் நிழலில் தேங்கி நிற்கும் சொச்ச நிர்வாகிகளையும் சொல்லாமல் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

இவர்களுக்கு மத்தியில் ஜி.கே.மணி போன்றவர்கள், “பாமக-வுக்குள் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சீக்கிரமே முடிவுக்கு வரும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நடு​வில், தந்​தைக்​கும் மகனுக்​கும் இடை​யில் நடக்​கும் அதி​கார யுத்​தம் நாளுக்கு நாள் உக்​ர​மாகிக் கொண்டே வரு​வ​தால் கீழ்​மட்ட நிர்​வாகி​கள் யார் பக்​கம் நிற்​பது என்று தெரி​யாமல் குழம்​பிக் கிடக்​கி​றார்​கள். ஏதாவது ஒரு பக்​கம் சாய்​பவர்​களை அப்​பா​வும் மகனும் மாறி மாறி பொறுப்​பு​களை விட்டு நீக்​கு​வதும் சேர்ப்​பது​மாக பரமப​தம் ஆடிக் கொண்​டிருப்​பதே இவர்​களின் குழப்​பத்​துக்​குக் காரணம்.

Read Entire Article