
சென்னை,
அன்புமணி ராமதாஸ் குறித்து ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அன்புமணி ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நேரில் சந்திக்க அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டிருக்கிறார்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பின்போது, பா.ம.க.வின் அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் சந்திக்க உள்ளார். 38 வருவாய் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் இந்த சந்திப்பில் கண்டிப்பாக பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், அவர்களுடன் ஆலோசனை நடத்தவும் இருக்கிறார்.