திண்டுக்கல்: பெற்றோர் இல்லாத குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மாத நிதி உதவி வழங்கும் ‘அன்புக் கரங்கள் திட்டம்’ மூலம் தமிழகத்தில் 2.82 லட்சம் குழந்தைகள் பயன்பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகளின் உடல் நலனைக் காக்கவும், தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் மரணங்களைத் தவிர்க்கவும், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. ஆட்சியர் செ.சரவணன் தலைமை வகித்தார்.