சிவகாசி , மே 7: சிவகாசி அருகே ரத்தினபுரிநகர் பகுதியில் அனுப்பன்குளம் விஏஓ காளியப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் சிவகாசி கிழக்கு போலீசார், நந்தீஸ்வரன் (64) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
The post அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது appeared first on Dinakaran.