சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் சபாநாயகர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து விட்டால் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என பாராமல் சமமாக நடந்து கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வலியுறுத்தினோம். தீர்மானம் கொண்டு வந்தால் தோல்வி அடையும் என தெரிந்தும் கொண்டுவர காரணம் நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகத் தான்.
கடந்த காலங்களில் அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் இந்த 4 ஆண்டுகளில் வாங்காத கடனை திமுக வாங்கியுள்ளது. ஆனாலும் எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதேபோல், அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வழக்கு தொடர்வோம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது அதை முயற்சி செய்பவர்களுக்கு மூக்குதான் உடைந்து போகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுகவை யாராலும் உடைக்கவோ முடக்கவோ முடியாது நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளோம் : எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.