சென்னை: அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர். சேலத்தைச் சேர்ந்த குழந்தைவேலு, அசோக் உள்ளிட்டோரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவதாக குழந்தைவேலுவிடம் ரூ.11 லட்சம், அசோக்கிடம் ரூ.5.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளார் . நுங்கம்பாக்கம் பாரில் நடந்த மோதல் தொடர்பாக 29ஆம் தேதி பிரசாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார்.
The post அதிமுக ஐடி பிரிவு மாநில நிர்வாகி பிரசாத் மீது 3 மோசடி வழக்கு appeared first on Dinakaran.