அதிமுக ஆட்சி அமைந்ததும் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு ரத்து: முன்னாள் அமைச்சர் தங்கமணி

8 months ago 46

நாமக்கல்: அதிமுக தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் எந்தெந்த கிராம ஊராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டதோ அவை அனைத்தையும் ரத்து செய்து மீண்டும் கிராம ஊராட்சிகளாகவே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

நாமக்கல்லில் சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது. நகரச் செயலாளர் கே.பி.பி.பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பேசினார். மனித சங்கிலி போராட்டத்தின் போது, மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு, போதைப் பொருள் விற்பனை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

Read Entire Article