சென்னை: அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான் என சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார், அதை அதிமுக அரசு ரத்து செய்தது. மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்று மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார் கலைஞர் என முதல்வர் கூறினார்.
The post அண்ணாவையும் கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான்: ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.