சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அளிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் அவர்களுக்கான விரைவான நீதியைப் பெற்று தருவதிலும் திமுக அரசு காட்டும் உறுதிப்பாட்டுக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்தத் தீர்ப்புச் சாட்சியாகியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றங்களையும் திமுக அரசு சகித்துக் கொள்ளாது என்பது மக்கள் மன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.