சென்னை :அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழ்நாடு டிஜிபி தரப்பில் 17 பக்க அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 13 சாட்சிகள் மகிளாநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மேலும், “ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 35 வழக்குகள் பதிவு. 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு: 9 வழக்குகளில் விடுவிப்பு,”இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.