
திஸ்பூர்,
அசாம் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோக்ரஜார் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் 512.58 கிராம் ஹெராயினும், 967.9 கிலோ கஞ்சாவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.