அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது: மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க அறிவுரை

1 month ago 8

சென்னை: அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கியது. 29ம் தேதி வரை நீடிக்கும் இந்த அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு கோடை மழை பெய்து குளிர்விக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது தொடர்ச்சியாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் 5ம் தேதியில் இருந்து வெப்பநிலை குறையத் தொடங்கி அதற்கு பிறகு பரவலாக மழை பெய்யத்தொடங்கும். தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணையும் பகுதி நிலை கொண்டுள்ளது.

மேலும், அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும் காற்றை தடுக்கின்ற வெப்ப அலை மற்றும் நீரோட்டம் வங்கக் கடல் பகுதியில் நீடிப்பதால் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நேற்று மதியம் நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் மழை பெய்து ஆந்திர எல்லைப்பகுதியில் தீவிரம் அடைந்தது. மேலும் ெ தற்கு கர்நாடகா- கேரளா அதை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு கோவை, திருப்பூர் பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.கர்நாடக எல்லையோரத்திலும் மழை பெய்தது.

அதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்களில் மழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக திருப்பூர், கோவை, நீலகிரி ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் இன்று மதியம் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் தென்கோடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். 5ம் தேதி டெல்டா தென் மாவட்டங்களிலும் மழை இருந்து கொண்டே இருக்கும். தற்போது தமிழ்நாட்டில் 29ம் தேதி வரை வெயில் கொளுத்தும் என்றும் அப்போது 108 டிகிரி வரை வெயில் உச்சம்தொடும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அரபிக் கடல் பகுதியில் இருந்து வீசும் காற்று தடுக்கப்பட்டு தமிழகம் நோக்கி வருவதால், இடி மின்னலுடன் மழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த மழை காரணமாக அக்னி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ய உள்ளதால் 104 டிகிரியை தாண்டி வெயில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓரிரு இடங்களில் மட்டுமே 100 டிகிரி முதல் 104 வரை செல்லும் வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் 100 டிகிரியாகவே இருக்கும் என்றும் அக்னி நட்சத்திரக் காலத்தில் வெயில் குறைவாக இருக்கும்படி மழை பெய்து குளிர வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புழுக்கம், மந்த வெயில், வியர்வை இருக்கும். மே மாதம் முழுவதும் மதியத்துக்கு பிறகு மழை தொடங்கி இரவிலும் மழை பெய்யும். இந்த மழை, மே 2வது வாரம் வரை தீவிரம் அடைந்து பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அக்னி நட்சத்திர காலத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை மற்றும் வெயில் அதிகரித்து காணப்படும் என்பதால் அந்த இடங்களில் அசவுகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் குழந்தைகள், வயதானவர்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் வெப்பத்தை தணிக்க இளநீர் மற்றும் மோர் உள்ளிட்ட குளிர் பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் தொடங்கியது: மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க அறிவுரை appeared first on Dinakaran.

Read Entire Article