அகஸ்தியர், சொரிமுத்து அய்யனார் கோயிலில் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை

1 day ago 6

மதுரை: அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் புகழ் பெற்ற அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்கள் உள்ளன. அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது.

Read Entire Article