அகஸ்தியர் அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள்

4 hours ago 4

மதுரை: அகஸ்தியர் அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். புலிகள் பாதுகாப்பு என அரசிடம் இருந்து பெறும் தொகையை வனத்துறை என்ன செய்கிறது? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாபநாசம் அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மக்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிப்பது குறித்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது.

The post அகஸ்தியர் அருவிக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் appeared first on Dinakaran.

Read Entire Article