அரூர், ஜன.21: அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, புதுப்பட்டி, இருளப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்து குவித்தனர். ஆக மொத்தம் 79 விவசாயிகள் 345 பருத்தி மூட்டைகளை எடுத்து வந்திருந்தனர். வரலட்சுமி ரகம் குவிண்டால் ₹6,896 முதல் ₹9,099 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ₹9 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனதாக சங்க செயலர் அறிவழகன் தெரிவித்தார்.
The post ₹9 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.