விருதுநகர்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்படுவதாக விருதுநகர் மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அவ்வாறு பணம் வசூலித்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் எச்சரித்தார்.
விருதுநகரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும் விருதுநகர் எம்பி-யுமான மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். குழுவின் உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.