தர்மபுரி, நவ.20: தர்மபுரி மாவட்டம் மதிக்கோண்பாளையம் அருகே உள்ள சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (35), விவசாயி. இவரது மனைவி கனிமொழி (29). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 6 மாத பெண் குழந்தை திடீர் சாவு appeared first on Dinakaran.