சென்னை: தீவுத்திடலில் 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தயாநிதி மாறன் எம்.பி, சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.